தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனைவியை கொலை செய்த கணவனுக்கு தொடர் சிறை!

அம்பாறை, சம்மாந்துறை காரைதீவுப் பகுதியில் மனைவியைத் தீ வைத்த கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான கணவனை தொடர்ந்தும் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல், இன்று (25) உத்தரவிட்டார். கடந்த 2016 ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் காரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் மெரினா (வயது 31) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவர்கள் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கமே இக்கொலைக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Loading...