தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எழுவர் விடுதலை குறித்த வழக்கு – ஜூன் 15ம் தேதி விசாரணை !

imagesராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக் குறைக்கப்பட்ட முருகன்,  சாந்தன், பேரறிவாளன் ஆகியோரையும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  நளினி, ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக  தமிழக சட்டப் பேரவையில் அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

தற்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா, இல்லையா என்று தொடரப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூன் மாதம் 15ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments
Loading...