தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனைவரும் ஒற்றுமையோடு வாழ்வோம்! மைத்திரி அழைப்பு

showImageInStoryநாட்டைக் கட்­டி­யெ­ழுப்பி முன்­கொண்டு செல்­வ­தற்கு அனைத்­து ­மக்­களும் ஒன்­று­ப­ட­வேண்டும். நாட்டை ஒன்­று­ப­டுத்­து­வ­தென்­பது அனைத்து மக்­களை ஒன்­று­ப­டுத்­து­வ­தே­யாகும். ஆகவே, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பி முன்­கொண்டு செல்­வ­தற்கு அனை­வரும் ஒன்­று­ப­டு­வோ­ம் என்று ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அழைப்பு விடுத்தார்.

சாரணர் இயக்­கத்தின் தேசிய ஜம்­போரி ஆரம்ப நிகழ்வு நேற்­றை­ய ­தினம் யாழ். மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெற்­றது. நேற்று மாலை 4 மணி­ய­ளவில் தேசியக்கொடி ஏற்­ற­லுடன் இந்த நிகழ்வு ஆரம்­ப­மா­கி­யது. அத­னைத் ­தொ­டர்ந்து சாரணர் கொடி ஏற்­றப்­பட்­ட­தோடு மாவட்ட ரீதி­யி­லான சாரணர் கொடி­களும் ஏற்றப்­பட்டு ஜனா­தி­பதி உள்­ளிட்ட அதி­தி­க­ளுக்கு உத்­தி­யோக பூர்வ சாரணர் இயக்­கத்தின் இலங்கைக்கான ஆணை­யாளர் பேரா­சி­ரியர் நிமால் டி சில்வா தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், சிறுவர் விவ­கார இரா­ஜங்க அமைச்சர் திருமதி விஜ­ய­கலா மகேஸ்வரன், வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், யாழ்.இந்­திய துணைத்­தூ­துவர் ஏ.நட்­ராஜன், மாகாண கல்வி அமைச்சர் குரு­கு­ல­ராஜா, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இரா­ம­நாதன் உட்­பட அனைத்து மாவட்­டங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சார­ணர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

சர்­வ­தேச சாரணர் தினத்தை நினைவு கூர்ந்து தேசிய சாரணர் ஜம்­போ­ரியை வட­மா­கா­ணத்தின் யாழ்ப்­பா­ணத்தில் நடத்­து­கின்­றீர்கள். அதில் பங்­கேற்­பதில் நான் மகிழ்­சி­ய­டை­கின்றேன். விசே­ட­மாக யாழில் இவ்­வா­றான நிகழ்­வொன்றை முன்­னெ­டுத்­த­மைக்­காக அனை­வ­ருக்கும் நன்­றி­க­ளையும் வாழ்த்­துக்­க­ளையும் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

இந்த நிகழ்வில் அணி­வ­குத்து நிற்கும் சார­ணர்­களை பார்க்கும் போது நான் சிறு­வான இருந்த காலத்தில் சாரணர் இயக்­கத்தில் இணைந்து செயற்­பட்­டமை நினை­வுக்கு வரு­கின்­றது. இற்­றைக்கு 48 ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக பாட­சாலை மாண­வ­னாக இருந்த காலத்தில் பொல­ந­று­வையில் சாரணர் இயக்­கத்தில் இணைந்து செயற்­பட்­டி­ருந்தேன்.

சாரணர் இயக்கம் சிறந்த மனி­தர்­களை உரு­வாக்­கி­யுள்­ளது. இதற்கு உலகில் பல உதா­ர­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. நானும் சார­ண­ராக பணி­யாற்­றி­ய­தாலோ என்­னவோ தற்­போது நாட்டின் ஜனா­தி­பதி என்ற உயர் பத­வி­யினை வகிக்­கின்றேன். சாரணர் அமைப்பில் தம்மை இணைத்­துள்ள பிள்­ளை­களில் தான் எமது நாட்டின் எதிர்­கால ஜனா­தி­ப­திகள் இருக்­கின்­றார்கள் என்­பதை இந்தச் சந்­தர்ப்­பத்தில் கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.

சார­ணர்­களைப் பொறுத்­த­வ­ரையில் முக்­கி­ய­மான விட­ய­மொன்றை கூற­வேண்டும். சார­ணர்கள் மனி­தா­பி­மானம், அன்பு, ஆத­ரவு, இரக்க குணங்­களை உடை­ய­வர்கள். பொறாமை, கோபம், குரோதம், வைராக்­கியம் ஆகிய குணங்கள் சார­ணர்­க­ளி­டத்தில் ஒரு­போதும் இருப்­ப­தில்லை.

எமது நாட்டில் காணப்­படும் பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெறு­வ­தற்கு சாரணர் இயக்கம் எதிர்­காத்தில் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை வழங்கும் என்ற நம்­பிக்கை உள்­ளது. அனைத்து மக்கள் மத்­தி­யிலும் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சாரணர் இயக்கம் உறு­து­ணை­யாக நிற்கும்.

சாரணர் இயக்­கத்தில் இன,மத,குல, வேறு­பா­டுகள் கிடை­யாது. உலகம் பூரா­கவும் 42 மில்­லி­ய­னுக்கு அதி­மா­ன­வர்கள் சாரணர் இயக்­கத்தில் அங்­கத்­து­வத்தைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

சார­ணர்கள் பிற­ருக்கு உத­வி­களை வழங்­கு­வ­தையும், தேவை­களை நிறை­வேற்­று­வ­தையும் பிர­தா­ன­மான செயற்­பா­டு­க­ளாக கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதனால் சாரணர் இயக்­கத்தின் பெறு­மதி என்­றுமே குறை­வ­டை­வ­தே­யில்லை. சாரணர் இயக்­க­மா­னது இந்து, பௌத்த மதங்­களில் கூறப்­பட்­டுள்ள தத்­து­வங்­க­ளுடன் பின்­னிப்­பி­ணைந்து காணப்­ப­டு­கின்­றது.

நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பி முன்­கொண்டு செல்­வ­தற்கு அனைத்­து­ மக்­களும் ஒன்­று­ப­ட­வேண்டும். நாட்டை ஒன்­று­ப­டுத்­து­வ­தென்­பது அனைத்து மக்­களை ஒன்­று­ப­டுத்­து­வ­தே­யாகும். ஆகவே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி நாட்டை கட்­டி­யெ­ழுப்பி முன்­கொண்டு செல்­வ­தற்கு அனை­வரும் ஒன்­று­ப­டுவோம்.

இந்த சாரணர் ஜம்­போ­ரியில் கலந்து கொண்­டுள்ள பிள்­ளை­களை பாருங்கள். அவர்­க­ளிடம் எந்­த­வி­த­மான முரண்­பா­டு­களும் இல்லை. அவர்­க­ளி­டத்தில் வேறு­பா­டுகள் இல்லை. ஒரு­வ­ருடன் ஒருவர் ஒற்­று­மை­யாக மகிழ்ச்­சி­யாக இருக்­கின்­றார்கள். கோபம், பொறாமை, வைராக்­கியம், குரோதம் எது­மே­யில்­லாது இருக்­கின்­றார்கள்.

சாரணர் இயக்­கத்தை மேலும் மேம்­ப­டுத்துச் செல்ல அவர்­களின் எதிர்­காலச் செயற்­பா­டு­களை வலு­வுள்­ள­தாக்க அர­சாங்கம் என்ற வகையில் அனைத்து வித­மான உத­வி­ளையும் ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வுள்ளேன். அவர்­க­ளது வேண்­டு­கோள்­களை நிறை­வேற்­று­வ­தற்கும் தயா­ர­க­வுள்ளேன் என்­பதை இச்­சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

யாழில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் இந்த தேசிய சாரணர் நிகழ்வில் தெற்கில் உள்ள பிள்­ளைகள் மகிழ்ச்­சி­யுடன் கலந்து கொண்­டி­ருக்­கின்­றனர். வடக்கில் உள்ள பிள்­ளைகள் தெற்­கி­லுள்ள பிள்­ளைகள் கலந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதால் மகிழ்ச்­சி­யுடன் இருக்­கின்­றார்கள். அனைத்­துப்­பிள்­ளை­க­ளுக்கும் ஒரே இரத்தம் தான் காணப்­ப­டு­கின்­றது. இவர்­களை முன்­னு­தா­ர­ணமாக் கொண்டு அனை­வரும் ஒன்­று­ப­ட­வேண்­டு­மென இச்­சந்­தர்ப்­பத்தில் கேட்­டுக்­கொள்­கின்றேன்.

சார­ணர்­களை உரு­வாக்­கு­வதில் ஆசி­யர்­களின் பங்கு மிகப்­பெ­ரி­யது. அவர்கள் பாட­சா­லையில் செலவிடும் நேரத்திற்கு அப்பால் அதிகமான நேரத்தை செலவிட்டு அர்ப்பணிப்புடன் சாரணர்களை உருவாக்கின்றார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை என்றுமே பாரட்டப்படவேண்டியது.

உலகின் எந்தவொரு பாகத்திலும் சாரணர் இயக்கத்தின் மீதோ சாரணர் மீதோ எவ்விதமான விமர்சனங்களும் இல்லை. சாரணர்கள் வஞ்சகர்கள், கொலைகார்கள், ஊழல்மோசடிக்கார்கள் என குற்றம் சாட்டப்படுவதில்லை. சிறந்த மனிதாபிமானமுள்ளவர்களாகவே மதிக்கப்படுகின்றார்கள். அதனால் சாரணர்களின் பெறுமானம் நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது. நாட்டின் எதிர்காலத்தற்கு மனிதாபிமானமிக்க உயர்ந்த குணமுடியவர்கள் இன்றியமையாதவர்களாக காணப்படுகின்றார்கள் என்றார்.

Comments
Loading...