Designed by Iniyas LTD
அமெரிக்காவில் நிதி மோசடியில் இந்தியர் கைது!
அமெரிக்காவின் விர்ஜினீயாவில் உள்ள ஆஷ்பர்ன் நகரை சேர்ந்தவர் அமித்சவுத்ரி (44). இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். கடந்த 1992-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்தார்.
இவர் மீது பல மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலி பாஸ்போர்ட், மற்றும் போலி கிரெடிட் கார்டு மூலம் ரூ.170 கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது அலெக்சாண்டிரியா பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தன் மீது கூறப்பட்ட குற்றச் சாட்டுகளை அமித்சவுத்ரி மறுத்தார்.
இருந்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.