Designed by Iniyas LTD
இந்தியாவுக்கு கடல் வழியாக தங்கம் கடத்த முயன்றவர் கைது!
24 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் தங்கக்கட்டிகளை மன்னாரில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழியாக கடத்த முயன்றவரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் தங்கத்தையும் கைப்பற்றி தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ். சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்தநபர், வியாழக்கிழமை (17) மாலை தலை மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு, சனிக்கிழமை (19) யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வட மாகாண சுங்க திணைக்கத்தினரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.