Designed by Iniyas LTD
இந்திய தேசிய பசுமை தீர்ப்பாய இணையதளம் முடக்கம்
கடந்த 2-ந் தேதி, பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் ‘துல்லியமான தாக்குதல்’ நடத்தி அழித்தது. இந்நிலையில், அதற்கு பழிவாங்குவதாக கூறி, இன்று மர்ம நபர்கள் சிலர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் ஊடுருவி, அதை முடக்கினர். மேலும், அதில் அவதூறு கருத்துகளையும் வெளியிட்டனர்.
‘நீங்கள் காஷ்மீரில் அப்பாவி மக்களை கொல்கிறீர்கள். எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறீர்கள். அதை ‘துல்லியமான தாக்குதல்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள். அதற்கு பதிலடியாக எங்கள் இணையதள போரின் பலனை அனுபவியுங்கள். எங்களை முறியடிக்க முடியாது’ என்று அதில் கூறியுள்ளனர்.