தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலி.வடக்­கில்  பெரி­ய­ள­வி­லான விகாரை…

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலி.வடக்­கில்  பெரி­ய­ள­வி­லான விகாரை ஒன்­றும், இரு இடங்­க­ளில் புத்­தர் சிலை­க­ளும் காணப்­ப­டு­கின்­றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வலி.வடக்­கில் விடு­விக்­கப்­ப­டாத  பகு­தி­யில் விகாரை ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளதாக   கடந்த காலங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்­த நிலையில் சட்டவிரோதமாக குறித்த வ்விகாரை அமைக்கப்ப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த  விகாரை இரா­ணு­வத்­தி­னர் வழி­ப­டவே அமைக்­கப்­படடதாகவும், ­. இரா­ணு­வத்­தி­னர் அந்த நிலத்தை விட்டு வெளி­யே­றும் போது விகாரை அங்கு இருக்­காது என்றும் அவர்­கள் உறு­தி­ய­ளித்­திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த  பகு­தி­க­ளில் தற்பொழுது  மக்­க­ளின் பாவ­னைக்­காக  விடு­விக்­கப்­பட்­ட­போ­தும், புத்­தர் சிலை­க­ளும், விகா­ரை­யும்  அகற்றப்படவில்லை என  அங்குசென்ற ­மக்­கள்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...