Designed by Iniyas LTD
இராணுவ ரக் மோதியதில் மூவர் பலி – கிளிநொச்சியில் சம்பவம்..
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் அதில் பயணித்த மூன்று பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் , கரந்தையைச் சேர்ந்த குகன் , மற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்துத் தொடர்பான விசாரணைகளை பளைப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.