தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி அடைந்தவர்கள் நாளை சத்தியபிரமாணம் செய்ய உள்ளார்கள்.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி அடைந்தவர்களிற்கான சத்தியபிரமாண நாளை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை  கட்சியின் செயலாளர் பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு நாளை காலை 10.00 மணிக்கு கட்சி தலைமை காரியத்தில் இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபையில் தெரிவுசெய்யப்பட்ட 36 உறுப்பினர்கள்  இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்கள்.

குறித்த நிகழ்வானது கட்சியின் பிரதி தலைவர் யோகவேள் தலைமையில் இடம்பெற உ|ள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...