தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்வரும் 23 – 26ம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இடம்பெறாது

எதிர்வரும் 23 மற்றும் 26ம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இடம்பெறாது என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.department

ஆட்பதிவுத் திணைக்களம் பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்திற்கு மாற்றப்பட இருப்பதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி அந்த திணைக்களம் சுஹுருபாய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 27ம் திகதி முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

Comments
Loading...