தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.எஸ்.ஐ.எஸ்., சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை…

சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் முழுவதிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம் எனவும்
ஐ.எஸ்.ஐ.எஸ். கூறியுள்ளது.

இதேவேளை இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி மரணித்த ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகளின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பதிவேற்றி யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...