தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கணவனை இழந்த குடும்பத்தலைவிகளுக்கு வீடுகள் கையளிப்பு!

sampanthan-1-2-450x327திருகோணமலை – சம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சிலவற்றை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று பயனாளிகளிடம் கையளித்துள்ளார்.

சம்பூர் காளி கோவிலில் நேற்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனினால் வீட்டு உரிமையாளர்களிடம் திறப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கே இந்தத் தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது சம்பூர் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Comments
Loading...