Designed by Iniyas LTD
களனி கங்கையில் வீசப்பட்ட சிறுமியின் சடலம் மீட்பு!
வெலிவேரிய பிரதேசத்தில், தனது 6 வயது மகளுடன் தாயொருவர், களனி கங்கையில் நேற்று குதித்திருந்தார். இதனையடுத்து, பொலிஸார் – பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது தாய் காப்பாற்றப்பட்டார்.
அத்துடன், 29 வயதுடைய அந்த தாய் பியகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். எனினும், குழந்தை காணாமல் போன நிலையில் தேடுதல் தொடர்ந்தது. இந்நிலையில், குறித்த சிறுமியின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொண்ட மரண விசாரணையில், சிறுமியுடன் கங்கையில் குதிப்பதற்கு முன்னர் தாயினால் சிறுமி கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.