தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கியூபா புரட்சியின் 58வது ஆண்டு தினம் புரட்சி சதுக்கத்தில் மக்களால் அஞ்சலி!

6384கியூப புரட்சியின் 58வது ஆண்டு தினத்தை ஒட்டி, புரட்சி சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கியூபாவில் நடைபெற்று வந்த பாடிஸ்டாவின் ஆட்சியை, கம்யூனிஸ்ட் தலைவர் பிடல் காஸ்ட்ரோ, அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோர் தலைமையில் புரட்சி நடத்தி, 1959ஆம் ஆண்டு அகற்றி வெற்றி பெற்றனர்.

இதையடுத்து பிடல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்று, கியூபாவை வழிநடத்தி சென்றார்.இந்நிலையில் புரட்சியின் 58வது ஆண்டு தினம் ஆண்டுதோறும் ஜனவரி ஒன்றாம் தேதி கொண்டாடப்படும். கடந்தாண்டு கியூப முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைந்ததை அடுத்து, கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2ஆம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அப்போது புரட்சி சதுக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.அந்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இதனை அதிபர் ரால் காஸ்ட்ரோ ஏற்றுக் கொண்டார். கியூப பள்ளி மாணவர்கள் சிவப்பு நேர கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும் அணிந்து வந்திருந்தனர். அவர்கள் கையில் அந்நாட்டின் கொடியை ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் பிடல் காஸ்ட்ரோவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Comments
Loading...