Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியும், கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றுள்ளது. குறித்த பேரணி முழங்காவில் இரணைமாதா நகர் ஆலயத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டு முழங்காவில் சந்தையை வந்தடைந்துள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையினை கிளிநொச்சி மறைக்கோட்டத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கிளிநொச்சி மறைக்கோட்டத்திற்கு உட்பட்ட மக்கள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






