Designed by Iniyas LTD
குப்பை மலை சரிவில் பலியானவர்களுக்கு நட்ட ஈடு!
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததில் மரணமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது என, நிதியமைச்சு நேற்று (17) அறிவித்துள்ளது.
மரணித்தவரின் குடும்பத்துக்கு 100,000 ரூபாவும் சேதமடைந்த சொத்துகளுக்கு 2.5 மில்லியன் ரூபாய் வரையிலும் நட்டஈடு வழங்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார். இதற்கான நிதி, ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாக நிதியமைச்சர் கருணாநாயக்க கூறினார்.