தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிசில் இரண்டு புதிய மாடல்களை விரைவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ் இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.

அதன்படி இரு மாடல்களும் வாட்டர்-டிராப் ரக நாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் கேலக்ஸி எப்1 இரு ஸ்மார்ட்போன்களில் உயர்ந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகின்றது.

ப்ளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் பிரத்யேக வலைப்பக்கத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன. தற்போது அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

சிறப்பம்சங்களை

கேலக்ஸி எப்02எஸ் மாடல்

  • 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
  • மூன்று பிரைமரி கேமராக்கள்
  • 13 எம்பி பிரைமரி கேமரா
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி

கேலக்ஸி எப்12 மாடல்

  • 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
  • குவாட் கேமரா சென்சார்கள்
  • யுஎஸ்பி டைப் சி போர்ட்
  • எக்சைனோஸ் 850 பிராசஸர்
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி
Comments
Loading...