Designed by Iniyas LTD
சிறீலங்காவின் அபிவிருத்தி பணிக்கு உலக வங்கி கடன் வழங்க முடிவு.

சிறீலங்காவின் நகர அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக உலக வங்கி 147 மில்லியன் டாலரை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது.
2020 ஆண்டு பூர்த்தி செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்காக இந்த கடனை வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளதாக, அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், யாழ்ப்பாணம், திருகோணமலை, ஹம்பாந்தொட்டை மற்றும் சிறீலங்காவின் தலைநகர் ஆகிய இடங்களில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக உலகவங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.