தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறுநீரக கடத்தல் எட்டு இந்தியர்கள் கைது!

1இலங்­கையை மையப்­ப­டுத்தி, இந்­தி­யாவில் இருந்து அழைத்து வரப்­படும் அப்­பாவி பொது மக்­க­ளுக்கு சிறு­நீ­ரக சத்­திர சிகிச்சை செய்து அவர்­க­ளது சிறு நீர­கங்கள் விற்­பனை செய்­யப்­பட்டு வந்த மோசடி வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் 8 இந்­தி­யர்கள் கொழும்பில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அதன்­படி வீசா இன்றி அல்­லது வீஸா காலா­வ­தி­யான நிலையில் இலங்­கையில் தங்­கி­யி­ருந்த, இத்­த­கைய சிறு நீரக மோசடி வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக நம்­பப்­படும் 8 இந்­தி­யர்கள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விஷேட பொலிஸ் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நுவன் வெதி­சிங்­கவின் கீழ் முன்­னெ­டுக்­கப்ப்ட்டு வரும் இது குறித்த விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த கைதுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

குறித்த சிறு நீரக மோசடி வர்த்­தகம் தொடர்­பி­லான வைத்­தி­யர்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது வெளிப்­ப­டுத்தப் பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வா­கவே வெள்­ள­வத்தை மற்றும் ஹெவலொக் நகர பகு­தி­களில் இருந்து இந்த 8 இந்­தி­யர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

முதலில் வெள்­ள­வத்தை பகு­தியில் இருந்து 6 பேரும் பின்னர் ஹெவலொக் பகு­தியில் இருந்து இரு­வரும் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று முன் தினம் இரவு 11.45 மணி­ய­ளவில் வெள்­ள­வத்தை பகு­தியில் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விஷேட நட­வ­டிக்­கையில், அங்­குள்ள மாடிக் கட்­டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் தங்­கி­யி­ருந்த 6 பேர் கைது செய்­யப்­பட்­டனர். இவர்கள் கைது செய்­யப்­படும் போது அவர்­க­ளது அடி வயிற்­றுப்­ப­கு­தியில் சிறு நீரக மாற்று சத்­திர சிகிச்சை செய்­து­கொண்­ட­மைக்­கான தழும்­புகள் காணப்­பட்­ட­தா­கவும் அவர்கள் அனை­வரும் வீஸா இன்­றியே நாட்டில் தங்­கி­யி­ருந்­துள்­ளமை உறு­தி­யா­ன­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதனைத் தொடர்ந்தே ஹெவலொக் பகு­தியில் வைத்து மேலும் இரு இந்­தி­யர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு கைதான 8 இந்­தி­யர்­களும் சாரதி, தையல் தொழி­லா­ளி­க­ளாக இலங்­கையில் பணி­யாற்­றி­யுள்­ள­துடன், வீசா அனு­மதி முடி­வ­டைந்த நிலையில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் இலங்­கையில் தங்கி இருந்­துள்­ள­தா­கவும் பொலிசார் தெரி­வித்­தனர்.

முன்­ன­தாக இந்­தி­யாவின் அஹ­ம­தாபாத் பிராந்­திய பொலிஸார் முன்­னெ­டுத்த விஷேட விசா­ரணை ஒன்­றூ­டாக இலங்­கையை மையப்­ப­டுத்தி இடம்­பெற்ற சர்­வ­தேச சிறு நீரக மோசடி தொடர்­பி­லான தக­வல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன.

இது தொடர்பில் இலங்­கையின் 5 தனியார் வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் அதில் பணி­யாற்றும் ஆறு வைத்­தி­யர்கள் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது. இந்த விவ­காரம் குறித்து சுகா­தார அமைச்சு 5 பேர் கொண்ட குழு­வொன்­றினை அமைத்து விசா­ரணை நடத்­தி­யது. இதில் குறித்த மோசடி தொடர்­பி­லான சில தக­வல்­களை அந்த குழு உறுதி செய்­தி­ருந்­த­துடன் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டாத அக்­கு­ழுவின் அறிக்கை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

அத்­துடன் சுகா­தார சேவைகள் பணிப்பாளர் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முன் வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, வைத்தியர்கள் தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளிலேயே, சிறு நீரக மோசடி சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த இந்தியர்களை கைது செய்துள்ளனர்.

Comments
Loading...