Designed by Iniyas LTD
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்பதை வரவேற்கிறோம் : டிடிவி தினகரன்
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்பதை வரவேற்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்பதை வரவேற்கிறோம். ஜெயலலிதா மரணத்தை தேர்தலோடு இணைத்து பேசக்கூடாது.
ஸ்டாலின்,ஓபிஎஸ் சதிதிட்டங்களுக்கு தேர்தல் முடிவு பதிலடி கொடுக்கும். 57,000 வீடுகளுக்கான மனுவை பரிசீலித்த பின்பே தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். திமுக வெற்றி பெறுவதற்கு பன்னீர்செல்வம் அணி மறைமுகமாக செயல்படுகிறது. தோல்வி பயத்தில் தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.