Designed by Iniyas LTD
ஜோர்தான் பிரஜைக்கு மரண தண்டனை!
16 கிராம் போதைப்பொருடன் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, ஜோர்தான் பிரஜையை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.
ஜோர்தான் பிரஜையான அமிர் யுசூப் அல் சுதேன் என்பவருக்கே இவ்வாறு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. சந்தேகநபர், 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதியன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.