தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டெஸ்ட் போட்டி பகலிரவில் விளையாட முடியாதாம்! தென்னாபிரிக்கா

South Africa v India - Third One Day Internationalபக­லி­ரவு டெஸ்ட் போட்­டிக்கு தென்­னா­பி­ரிக்க வீரர்கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர்.

தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணியின் 2016ஆம் ஆண்டு மற்றும் 20-17ஆ-ம் ஆண்­டுக்­கான அவுஸ்­தி­ரே­லிய சுற்­றுப்­ப­ய­ணத்தின் போது ஒரு டெஸ்ட் போட்­டியை பக­லி­ர­வாக நடத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கான போட்டி அட்­ட­வணை இன்னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

இந்த நிலையில் பக­லி­ரவு டெஸ்ட் போட்­டிக்கு தென்­னா­பி­ரிக்க வீரர்கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர் ‘‘எங்­க­ளது வீரர்­க­ளுக்கு இரவில் இளஞ்­சி­வப்பு நிற பந்தை பயன்­ப­டுத்தி விளை­யா­டி­யதில் போதிய அனு­பவம் இல்லை. இத்­த­கைய சூழலில் ஆடு­வது எங்­க­ளது வீரர்­க­ளுக்கு சாத­க­மாக இருக்­காது.

இதனால் தான் அவர்கள் பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் ஆடு­வ­தற்கு தயங்­கு­கி­றார்கள்’’ என்று தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் வீரர்களின் சங்க தலைமை நிர்வாகி டோனி ஐரிஷ் கூறியுள்ளார்.

Comments
Loading...