Designed by Iniyas LTD
தமிழ்,முஸ்லிம்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த சூழ்ச்சி!
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நிலவும் சில முரண்பாடுகளை, பூதாகரமாக மாற்றுவதற்கு சில சக்திகள் பாரிய சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதை எம்மால் உணர முடிகிறது என கல்முனை மாநகர முதல்வர் எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வுக்கு தலைமை வகித்து விசேட உரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பட்டார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
“கடந்த சில நாட்களாக எனக்கு கிடைக்கும் தகவல்களை பார்க்கின்றபோது, எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே ஏற்படக்கூடிய நல்லுறவை மிகவும் இலகுவாக உடைக்கக் கூடிய காரணிகளை அறிந்து கொண்டுள்ள தீய சக்திகள், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனவா என்கின்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த சூழ்ச்சிகளை இரண்டு சமூகத்தினரும் இணைந்து முறியடிக்க வேண்டிய தருணத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். எமது மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் இருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எமது மாநகர சபையை பொறுத்தவரை எந்தவொரு சமூகத்திற்கும் அநியாயம் இழைக்காத வகையில் மிகவும் பக்குவத்துடன் எமது செயற்
பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்து கொண்டிருக்கின்றோம். அந்த அடிப்
படையில் நாம் சில விடயங்களை பிரத்தியேகமாகப் பேசி, சில இணக்கப்பாடுகளைக் கண் டுள்ளோம். அதன் மூலம் எவர் எந்த ரூபத்தில் வந்தாலும் எம்மை உடைக்க முடியாது என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.