தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தீய சக்திகளை அமெரிக்காவிலிருது தள்ளி வைப்பதே தமது நோக்கமாம்!

201610241106544049_Donald-Trump-to-sue-molestation-complaint-womens_SECVPF-450x256தீய சிந்தனை கொண்ட நாசகர சக்திகளை அமெரிக்காவில் இருந்து தள்ளி வைப்பதே எனது நோக்கம் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் நீண்ட தடுப்புச் சுவர் கட்டுவது, ஹெச்1 பி விசா விதிமுறைகளை கடுமையாக்கியது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழித்துக்கட்டும் பணிகளை தீவிரப்படுத்தியது எனப் பல்வேறு அதிரடி பணிகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.

அதிபர் பதவியேற்ற நாள் முதலாக, அவர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு, பல தரப்பிலும் அதிருப்தி கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா வந்த அகதிகளை திருப்பி அனுப்பும் முயற்சிகளை டிரம்ப் மேற்கொண்டதால், அந்நாட்டு மக்களே அவருக்கு எதிராகக் கிளம்பியுள்ளனர்.

இந்நிலையில், தனது செயல்பாடு பற்றி, விளக்கம் அளித்துள்ள டிரம்ப், தீய சக்திகளை அமெரிக்காவில் இருந்து விலக்கி வைப்பதே தனது நோக்கம் எனக் கூறியுள்ளார். யார் என்ன சொன்னாலும், அகதிகளை குறிப்பாக, முஸ்லீம் அகதி மக்களை தள்ளி வைப்பதுதான் எதிர்காலத்திற்கு சிறந்த பணி என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...