Designed by Iniyas LTD
நந்திக்கடலுக்கு அருகே உரப்பையில் மண்டையோடு!

முள்ளிவாய்க்காலுக்கு தெற்காக உள்ள நந்திக்கடலுக்கு அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பச்சை உரப்பை ஒன்றில் கட்டியவாறு நெற்றிப் பகுதியில் குண்டு துளைத்த துவாரத்துடன் மண்டையோடு ஒன்று இருப்பதாக அப்பகுதி தொழிலாளியொருவரினால் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து எச்சங்கள் இருப்பதை ரவிகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்இ தகவலை அடுத்து நேரில் சென்று பார்வையிட்ட போது அப்பிரதேசங்களில் பெருமளவு மனித எச்சங்கள் காணப்பட்டன. இவை உரப்பைகளில் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தன அவற்றில் சில மண்டையோடுகளில் தூப்பாக்கியால் சுடப்பட்ட துவாரங்களும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இது தொடர்பாக உடனடியாக குறித்த பகுதி கிராமசேவையாளருக்கு தகவலை தெரியப்படுத்தினேன். என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார். மேலும் குறித்த பகுதியில் மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட தடயங்கள் தென்படுவதாகவும் இவற்றுக்குள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்