Designed by Iniyas LTD
நாட்டிற்கு திரும்பி அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள் 1818 பேர்…
இலங்கையர்கள் 1818 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் நாடு திரும்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கிருந்த இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டது.
இம்மாதம் முதலாம் திகதி முதல் 3 மாத காலத்திற்கு அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்குத் தயாராகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.