தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.suresh

இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் சரியான விசாரணைகளின்றி பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றி அங்கு மக்கள் குடியமர்த்தப்படுவர் என வாக்குறுதியளிக்க வேண்டும், மேலும் தமிழ் மக்களுக்கு நிரந்ரமான அரசியல் தீர்வு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கையையும் ஏற்றுக் கொள்பவரை கூட்டமைப்பு ஆதரிக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இது சம்பந்தமாக எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

Comments
Loading...