தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நுவரெலியாவுக்கு சென்ற ஜனாதிபதிக்கு ஏற்பட்ட சோதனை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகப்டர் சீரற்ற காலநிலையினால் மீண்டும் திருப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நுவரெலியாவில் நேற்று-முன்தினம் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஹெலிகப்டரில் சென்றுள்ளார்.

ஐனாதிபதியை ஏற்றி கொண்டு நுவரெலியா நோக்கி சென்ற ஹெலிகப்டர் சீரற்ற காலநிலை காரணமாக கொத்மலையில் இருந்து மீண்டும் கொழும்புக்கு திருப்பியுள்ளது.

இதனால் ஜனாதிபதியினால் நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாண பிரதான அமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட அமைச்சர் உறுப்பினர்கள் 8 பேர் குறித்த ஹெலிகப்டரில் பயணித்துள்ளனர்.

இதனால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாக ஜனாதிபதி வழங்கிய தகவலை நிதி இராஜாங்க அமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...