தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பசுபிக் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்…

பசுபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.

இந்த நில நடுக்கமானது  கடலில் சுமார் 24 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பிஜி, வானட்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சுமார் 1 மீட்டர் உயரத்திலான அலைகள் வீசலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...