தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார்! பான் கீ மூன்

574532-Ki-moon_CARஇலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெய்யான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி உதவத் தயார் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்  கீ – மூன் தெரிவித்துள்ளார்.
உண்மையை அறிந்து கொள்ளும் சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், நீதியைப் பெற்றுக்கொள்ளவும் நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் பாதிப்புகளை எதிர்நோக்கிய தனிப்பட்ட நபர்கள் மற்றும் தரப்புகள் உண்மையை அறிந்துகொள்ள உரிமையுடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் மீளவும் இடம்பெறாமல் இருப்பதைத் தடுக்கவேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Loading...