Designed by Iniyas LTD
பாரிஸில் ஈழத்துக்களைஞர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு!
ஈழத்து கலைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்குடனும் எமது சினிமாவை வர்த்தக சந்தையை நோக்கி நகர்த்துவதுடன் எமது வலிகளையும் எமது ஆத்மார்த்தமான எண்ணங்களையும் கலையின் வடிவில் எடுத்துச்சொல்லி உலகத்தின் பார்வையை எமது பக்கம் திசைதிருப்பி எமக்கான நீதியை நாமே பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தூய்மையான கோட்பாட்டினை முன்னிறுத்தி அனைத்துலக கலைஞர்களையும் ஒன்றிணைத்து வருகின்ற இரண்டாம் திகதி ஆடி மாதம் (02.07.2016) பாரிஸ் மண்ணில் ஒன்றுகூடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடல் நிகழ்விற்கு அனைத்துக் கலைஞர்களை வருக வருக என வரவேற்கின்றோம்.
