தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெண் மருத்துவர் சடலமாக மீட்பு!

நுவரெலியா மாவட்ட வைத்தியர் விடுதியில் இருந்து, 33 வயது மதிக்கத்தக்க பெண் வைத்தியரின் சடலத்தை, நுவரெலியா பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

களனியைச் சேர்ந்த தினுசிகா எட்டியாராய்ச்சி என்பவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...