தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆட்டோவில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

தணமல்வில – கொமலிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து எரிந்த நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , உயிரிழந்த நபர் இனந்தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டு முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தணமல்வில -கங்கேயாய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Comments
Loading...