தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேரன் உயிருடன் கிடைத்திருக்க்காவிடின் மனித வெடிகுண்டாக மாறி அரசியல் வாதிகளை அழித்திருப்பேன்! சிங்கள முதியவரின் குமுறல்

nnnnnnnnnஇந்த இட­ரி­லி­ருந்து எனது பேரன் மட்­டும் தப்­ப­வில்லை என்­றால், நான் தற்­கொ­லைக் குண்­டு­தா­ரி­யாக மாறி அர­சி­யல்­வா­தி­களை அழித்­தி­ருப்­பேன். இவ்­வாறு மீதொட்­ட­முல்ல குப்­பை­மேட்­டுக்கு எதி­ரான மக்­கள் இயக்­கத்­தின் ஏற்­பாட்­டா­ள­ரா­கச் செயற்­பட்ட கீர்த்­தி­ரத்ன தெரி­வித்­தார்.
மீதொட்­ட­முல்­ல­யில் குப்பை கொட்­ட­வேண்­டா­மென முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்­களை எல்­லாம் இவரே தலை­மை­யேற்று நடத்­தி­யி­ருந்­தார். பொலி­ஸா­ரின் கொட்­டன் தாக்­கு­தல், கண்­ணீர்ப் புகை­குண்­டுத் தாக்­கு­தல் ஆகி­ய­வற்­றுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தார். எவ்­வ­ள­வு­தான் நெருக்­க­டி­கள் – அழுத்­தங்­கள் வந்த போதி­லும் மக்­க­ளுக்­கான போராட்­டத்தை அவர் கைவி­ட­வில்லை என்று பிர­தே­ச­வா­சி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.
ஆனால், குப்­பை­மேட்­டுக்­குள் சிக்கி கீர்த்­தி­ரத்­ன­வின் மகள், மரு­ம­கன், பேத்தி ஆகி­யோர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்ட அவ­ரது மனை­வி­யும் உயி­ரி­ழந்­து­விட்­டார். தற்­போது அவ­ருக்­கென மக­ளின் மகன் (பேரன்) மாத்­தி­ரமே மிஞ்­சி­யுள்­ளார்.
உற­வி­னர்­க­ளுக்கு இறு­திக்­கி­ரி­யை­கள் நடை­பெ­றும்­போது துய­ரம் தாங்க முடி­யா­மல் அவர் மயங்கி விழுந்­து­விட்­டார். அத்­து­டன் அர­சி­யல்­வா­தி­கள் மீதும் அவர் கடும் சீற்­றத்­து­ட­னேயே இருக்­கின்­றார்.
‘குப்­பை­கொட்டி எங்­கள் வாழ்க்­கை­யைப் பாழாக்­கி­வி­டா­தீர்­கள் என்று அழுது புலம்­பி­னோம். கெஞ்­சிக்­கூ­டப்  பார்த்­தோம். எமது கோரிக்­கை­கள் கணக்­கில் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு கிரா­மத்­தின் வாழ்­வுக்­காக நான் ஆரம்­பித்த போராட்­டம் இந்­தச் சாவு­க­ளு­டன் முடி­வுக்கு வந்­துள்­ளது. பேரன் மட்­டும் இல்­லா­விட்­டால், தற்­கொலை குண்­டு­தா­ரி­யா­கச் சென்று அர­சி­யல்­வா­தி­களை அழித்­து­வி­டு­வேன்’ என்று அவர் கடும் சீற்­றத்­து­டன் கருத்து வெளி­யிட்­டுள்­ளார்.
Comments
Loading...