தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொதுத்தேர்தலில் களமிறங்க நான் தயார் – அனந்தி சசிதரன்

என்னுடைய குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனை என்னிடம் சிறுசிறு குழுக்களாக வந்து தெரிவித்துள்ளார்கள். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனக்கான ஆசன ஒதுக்கீட்டை வழங்குமாயின் பொதுத்தேர்தலில் களமிறங்க நான் தயாராக இருக்கிறேன் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வாரவெளியீடு ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,Ananthi-sasitharan

எவருக்கும் தேர்தலில் போட்டியிடுகின்ற விருப்பம் இருக்கலாம். ஆனால் மக்களின் ஆதரவு இருந்தால் தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். எனக்கு தேர்தலில் போட்டியிடும் விருப்பம் குறைவாக இருந்தாலும் மக்களின் ஆதரவு அதிகமாகவே காணப்படுகின்றது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் மக்கள் என்னை வலியுறுத்துகின்றார்கள். இதனால்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றேன் எனவே எங்களுடைய கட்சி எனக்கான ஆசன ஒதுக்கீட்டை வழங்குமாயின் பொதுத்தேர்தலில் களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  வழங்கிய பேட்டியின் முழுவிபரம்!

கேள்வி: ஐக்­கிய நாடுகள் சபையின் புதிய மனித உரி­மைகள் ஆணை­யா­ளரை அண்­மையில் நீங்கள் சந்­தித்­தி­ருந்­தீர்கள். இந்தச் சந்­திப்புத் தொடர்பில் கூறுங்கள்?

பதில்:  ஐ.நா. வின் புதிய மனித உரிமை ஆணை யாளரை சந்­திக்கும் வாய்ப்பு அண்­மையில் எனக்குக் கிடைத்­தது. ஆனால், இந்தச் சந்­திப்பு நீண்ட நேர சந்­திப்­பாக அமை­ய­வில்லை. இருந்தும் என்னை அவ­ருக்கு அறி­மு­கப்­ப­டுத்தும் வாய்ப்பு இந்தச் சந்­திப்பின் மூலம் எனக்குக் கிடைத்­தது.

ஜெனீவா மனித உரிமை அமர்­வு­களின் போது நான் வழ­மை­யாக அங்கு செல்வேன். அவ்­வாறு சென்­றி­ருந்­த­போதே எனக்கு புதிய மனித உரிமை ஆணை­யா­ளரைச் சந்­திக்கும் வாய்ப்புக் கிடைத்­தது. தொண்டு நிறு­வ­னங் கள் மற்றும் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்­களை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­ய­ போது, மனித உரிமை ஆணை­யாளர் என்­னையும் சந்­தித்தார்.

அவ­ரிடம் நான் யார் என்­பதை அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்தேன். எங்­க­ளு­டைய மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அவ­ருடன் கலந்­து­ரை­யாட வாய்ப்புக் கிடைக்­க­வில்லை. ஆகவே, எதிர்­வரும் காலங்­களில் அதற்­கான சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நான் முயற்­சிப்பேன்.

கேள்வி: வட­மா­காண சபை நிறு­வப்­பட்டு ஒரு வரு­டங்­க­ளுக்கு மேலா­கின்­றது. அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களை வழங்கி உங்­களைத் தெரிவு செய்த மக்­க­ளுக்­காக நீங்கள் இது­வரை எவ்­வா ­றான பணி­களை மேற்­கொண்­டுள்­ளீர்கள்?

பதில்: எமது மனச்­சாட்­சி­யின்­படி கூறு­வ­தாயின் இது­வரை பெரி­தாக எதுவும் மக்­க­ளுக்­காகச் செய்­ய வில்லை என்றே கூற­வேண்டும். ஆனால் நான் எனது தேர்தல் பிர­சா­ரங்­க­ளின் ­போது, வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்கு ஏற்ப செயற்­பட்டு வரு­கின்றேன். அதா­வது, சர­ண­டைந்த மற்றும் காணா­மற்­போன உற­வு­களை மீட்­பது தொடர்­பா­கவும் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பா­கவும் போராடி வரு­கின்றேன்.

ஜெனீ­வா­விற்குச் சென்­ற­போதும் இந்த விட யம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். அத்­து டன் என்னைச் சந்­திக்கும் வெளி­நாட்டுப் பிர­தி­நி­தி கள் அனை­வ­ரி­டமும் இந்தக் கோரிக்­கை­களை முன் ­வைத்து வரு­கின்றேன். நான் எனது தேர்தல் பிர­சா­ரங்­க­ளின் ­போது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்­காக தொடர்ந்தும் குரல்­கொ­டுத்து வரு­கின்றேன்.

இதை­வி­டுத்து மாற்று வழிகள் எத­னையும் நான் பின்­பற்­ற­வில்லை. அந்த வகையில் நான் சொன்­னதைச் செய்­கின்றேன் என்ற நம்­பிக்கை மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி: வேறு மாகா­ணங்­களில் மாகாண சபை­யி னால் வேலை­வாய்ப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு வட­ மா­கா­ண­ சபையினால் எவ்­வா­றான வேலை வாய்ப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன?

பதில்:  வட மாகாண சபையில் ஐந்து அமைச்­சுக் கள் காணப்­ப­டு­கின்­றன. இன்­று­வரை வெளிப்­ப­டை­யாக பத்­தி­ரி­கை­களில் விளம்­ப­ரங்­களை வெளி­யிட்டோ அல்­லது வேறு வழி­க­ளிலோ எந்­த­வொரு வேலை வாய்ப்பும் வழங்­கப்­ப­ட­வில்லை.

இதற்குக் காரணம், 13 ஆவது திருத்தச்சட்­டத்தின் பிர­காரம் ஆளு­ந­ருக்கே அனைத்து அதி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் எம்மால் மக்­க­ளுக்கு வேலை­வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்­க­மு­டி­யாத சூழ்­நிலை நில­வு­கின்­றது.

ஓர் அலு­வ­லகப் பணி­யா­ளரை நிய­மிப்­ப­தற்குக் கூட எமக்கும் எமது அமைச்­சு­க­ளுக்கும் அதி­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை. இத­னால்தான் எம்மால் எந்­த­வொரு வேலை வாய்ப்­பையும் வழங்க முடி­ய­வில்லை.

ஏனைய மாகா­ணங்­களைப் பொறுத்­த­வரை ஆளுநர், அமைச்­சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஆகியோர் ஒரே கட்சி, ஒரே இனம் மற்றும் மொழி சார்ந்­த­வர்­க­ளாக இருப்­பதால் அவர்கள் எந்­த­வொரு இடை­யூறும் இல்­லாமல் தமது பணி­களை ஆற்றி வரு­கின்­றனர்.

ஆனால் எங்­களைப் பொறுத்­த­வரை அவ்­வா­றான நிலைமை இல்லை. இனம், மொழி போன்­ற­வற்றால் நாங்கள் வேறு­பட்டு இருப்­பதால் இந்தப் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன.

வட­மா­காண சபையைப் பொறுத்­த­வரை, அதி­கா­ரங்கள் அனைத்தும் ஆளு­நரின் கைக­ளிலே இருக்­கின்­றன. அர­சாங்கப் பிர­தி­நி­தி­யான ஆளு­நரின் கைகளில் அதி­கா­ரங்கள் இருப்­பதால், எம்மால் மக்­க­ளுக்­கான எந்­த­வொரு அபி­வி­ருத்திப் பணி­க­ளையோ அல்­லது வேலை­வாய்ப்­புக்­க­ளையோ வழங்க முடி­ய­வில்லை.

ஆனால் மாகாண அமைச்­சர்கள் தற்­து­ணிவின் பேரில் நிய­ம­னங்­களை வழங்­கக்­கூ­டிய வாய்ப்­புகள் இருப்­ப­தாக நான் நினைக்­கின்றேன். ஆனால் இந்த விடயம் தொடர்பில் என்னால் விவா­திக்க முடி­யாது. ஏனெனில் நான் ஓர் சாதா­ரண மாகாண சபை உறுப்­பினர். அவ்­வா­றி­ருந்­து­கொண்டு அமைச்­சர்­களை விமர்­சிக்க முடி­யாது என்ற நிலைமை ஏற்­படும்.

கேள்வி: ஏனைய மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள சலு­கைகள் அனைத்தும் வட மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­னவா?

பதில்:  எனக்கு கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுடன் தொடர்­புள்­ளது. அங்­குள்ள மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இரண்டு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் வழங்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த தேர்தல் பணி­க­ளின்­போது அவர்கள் வட­மா­கா­ணத்­திற்கு வந்­த­போது, அவர்­க­ளுடன் தலா இரண்டு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பாது­காப்புப் பணியில் ஈடு­பட்­டி­ருந்­ததை என்னால் அவ­தா­னிக்க முடிந்­தது.

அதேபோல் எமக்­கான வாக­ன­ வ­ச­தியும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு பின்­னர் தான் வாகன வச­திகள் ஏற்­ப­டுத்தித் தரு­வ­தாக கூறி­யுள்­ளனர். வட­மா­காண சபையைப் பொறுத்­த­வரை அமைச்­சர்­க­ளுக்கும், சபா­நா­ய­க­ருக்கும், உதவிச் சபா­நா­ய­க­ருக்கும் வாகன வச­திகள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

அதி­க­மாக அச்­சு­றுத்­தப்­படும் மாகாண சபை உறுப்­பினர் என்ற வகை­யிலும், எனக்கு வாகன வச­தியோ, பாது­காப்போ ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாற பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு மத்­தி­யில்தான் நான் எனது பணி­களை முன்­னெ­டுத்துச் செல்­கின்றேன்.

கேள்வி: அண்மைக்கால­மாக வட­மா­கா­ணத்தில் பெண்கள் மீதான வன்­மு­றை­களும்சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களும் அதி­க­ரித்­துள்­ளன. ஓர் பெண் மாகாண சபை உறுப்­பினர் என்ற வகையில்இவற்றைத் தடுப்­ப­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளீர்கள்?

பதில்:  பெண்கள், சிறு­வர்கள் மீதான வன்­மு­றைகள் தொடர்­பி­லான பொறுப்பு எனக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­மை­யினை ஊட­கங்கள் வாயி­லாக என்னால் அறிய முடி­கின்­றது. ஆனால் இந்தச் செயற்­பா­டுகள் வட மாகாண சபையில் எந்த அமைச்­சுக்குக் கீழ் இருக்­கின்­றன என்­பது எனக்குத் தெரி­ய­வில்லை.

ஆனால் இந்தக் கட­மை­களை வட­மா­காண சபை என்­னிடம் எழுத்­து­மூ­ல­மாக ஒப்­ப­டைக்­க­வில்லை. எழுத்­து­மூலம் ஒப்­டைக்­கப்­ப­டாத ஓர் விட­யத்தில் நான் எவ்­வாறு தலை­யிட முடியும். ஆனால், நான் ஓர் சமூக சேவகி என்ற வகை­யிலும், மக்­களின் நலன் சார்ந்த வகை­யிலும், பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சந்­திக்­கின்றோம். அத்­துடன், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் விப­ரங்­களைத் திரட்டி உரிய இடங்­களில் ஒப்­ப­டைத்து வரு­கின்றோம். சிறுவர் நன்­ன­டத்தைப் பிரிவு எமது இந்த முயற்­சி­க­ளுக்கு உதவி புரி­கின்­றது.

அத்­துடன் பொலி­ஸாரும் எமக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்டும். யாழ். மாவட்­டத்தைப் பொறுத்­த­வரை இவ்­வா­றான விட­யங்­க­ளுக்கு பொலி­ஸாரின் ஒத்­து­ழைப்பு குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஆகவே, இந்த விட­யங்கள் தொடர்­பான முழு­மை­யான அதி­கா­ரத்தை எனக்கு வழங்­கினால், நான் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்பேன்.

தற்­போ­துள்ள நிலையில் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்­பான விப­ரங்­களைச் சேக­ரித்து உரிய இடங்­க­ளுக்கு அனுப்பி வரு­கின்றேன். இதனை விடுத்து மேல­தி­க­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு எனக்கு போதிய அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி: எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் நீங்கள் போட்­டி­யி­டு­வீர்­களா?

பதில்:  என்­னு­டைய குரலும் பாரா­ளு­மன்­றத்தில் ஒலிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள். அதனை என்­னிடம் சிறு சிறு குழுக்­க­ளாக வந்து தெரி­வித்­துள்­ளார்கள். எனவே எங்­க­ளு­டைய கட்சி எனக்­கான ஆசன ஒதுக்­கீட்டை வழங்­கு­மாயின், பொதுத் தேர்­தலில் கள­மி­றங்க நான் தயா­ராக இருக்­கின்றேன். எவ­ருக்கும் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற விருப்பம் இருக்­கலாம். ஆனால் மக்­களின் ஆத­ரவு இருந்­தால்தான் தேர்­தலில் வெற்­றி­பெற முடியும். எனக்கு தேர்­தலில் போட்­டி­யிடும் விருப்பம் குறை­வாக இருந்­தாலும். மக்­களின் ஆத­ரவு அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு தமிழ்­மக்கள் என்னை வலி­யு­றுத்­து­கின்­றார்கள். இதனால் நான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றேன்.

கேள்வி: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அழிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அழிப்பது தொடர்பில் நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்:  பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரே விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்கக்கூடாது என்று தெரிவித்தள்ளார். எனவே மக்கள் சாட்சியமளிப்பதில் அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி பாதிப்புக்கள் தொடர்பாக அறிந்தவர்கள் கூட இந்த விசாரணைக்குழுவுக்கு சாட்சியம் அளிக்க முடியும். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக சாட்சியமளிக்கக் கூடியவர்கள் நிச்சயமாக தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

Comments
Loading...