Designed by Iniyas LTD
மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57051 ஆக உயர்வு…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 16,632 குடும்பங்களைச் சேர்ந்த 57, 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மட்டகளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த 242குடும்பங்களைச் சேர்நத 691 நபர்கள் 3 முகாம்களில் தங்கவைக்கப்ட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறு மூலை வளாகத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிகபப்டுகின்றது.
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2, 296 குடும்பங்களைச் சேர்ந்த 8, 564நபர்களும கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1, 166 குடும்பங்களைச் சேர்ந்த 4, 075 நபர்களும், கோறளைப்பற்று செயலாளர் பிரிவில் 924 குடும்பங்களைச் சேர்ந்த2, 989 நபர்களும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 2, 916 குடும்பங்களைச் சேர்ந்த 9, 877 நபர்களும்,
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1646 குடும்பங்களைச் சேர்ந்த 5853நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4, 260 குடும்பங்களைச் சேர்ந்த 13, 923 நபர்களும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 486 குடும்பங்களைச் சேர்ந்த 1, 669 நபர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 405 குடும்பங்களைச் சேர்ந்த 1, 592நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 137 குடும்பங்களைச் சேர்ந்த546 நபர்களும், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 604 குடும்பங்களைச் சேர்ந்த 2, 167நபர்களும், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1, 112 குடும்பங்களைச் சேர்ந்த 3, 670 நபர்களும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 1, 037 நபர்களும், மண்முனை தென்கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 86குடும்பங்களைச் சேர்ந்த 294 நபர்களும், போரதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 260குடும்பங்களைச் சேர்ந்த 795 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 27 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.