Designed by Iniyas LTD
மீண்டும் ஏமாற போகிறார்களா தமிழர்கள்! மைத்திரியுடன் இரகசியமாய் சந்தித்த சம்மந்தன் உட்பட சில புலம்பெயர் அமைப்புக்கள்..?
தாயக விடுதலைக்காக போராடி உடலில் பல காயங்களோடு உதவிகள் இல்லாமல் கஷ்டப்படும் முன்னாள் போராளிகளை கூட இவர்கள் சிந்திக்கவில்லை, மேலும் கணவனை இழந்து குடும்பத்தின் பொறுப்பினை சுமந்து இன்று வாழ்வாதாரத்திற்கே போராடும் எங்கள் ஈழப்பெண்களை கூட இவர்கள் சென்று பார்க்கவும் இல்லை.
ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் பல தடவை கைக்குள் வந்து சென்றபோதெல்லாம் இப்படியான தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தினால் கைநழுவிச் சென்றுள்ளது.
ஆங்கிலேயர்கள் இலங்கையை பிரித்து கொடுக்க முற்பட்ட போது பணத்தாசை பிடித்த தமிழர்களால் அன்று சிங்கள இனவாதத்தின் கைக்கூலிகளாக மாறியதால் இன்று வரை பலி கொடுத்த உயிர்களுக்கு கணக்கில்லை.
சிறிலங்காவை போர் குற்ற விசாரணையிலிருந்து பாதுகாக்க இவர்கள் கைக்கூலிகளாக மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.
தாயக தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் இனியும் விழிப்பாக இருக்காவிடின் மீண்டும் ஈழம் சீரழிவதோடு ஈழத்தில் தமிழர்கள் எனும் இனம் இருந்ததற்கான அடையாளமே அழிக்கப்படும் இது மறுக்க முடியாத உண்மை.