தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவர் படுகொலையை கண்டித்து வாழ்வுரிமைக்கட்சி முற்றுகைப் போராட்டம்!

velmurugan-1 copyஇந்திய கடல் எல்லையில் நேற்று 06-03-2017 இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர், தொடரும் இலங்கை ராணுவத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 07.03.2017 செவ்வாய்க்கிழமை இன்று மாலை 4-30 மணியளவில் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

Comments
Loading...