தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைப் பெரியாறு விவகாரம்: நாளை மூவர் கண்காணிப்பு குழுவின் ஆய்வுக் கூட்டம்

முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவின் ஆய்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

mullai periyarஇதுகுறித்த அதிகாரபூர்வ கடிதம் தமிழக, கேரள அரசு அதிகாரிகளுக்கு வந்துள்ளது. கடந்த நவம்பர் 24,ம் தேதிக்கு பின் கடந்த ஏழு மாதங்கள் கழித்து மூவர் குழுவின் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.

மேலும் ஆய்வின் போது அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மூவர் குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பழனியப்பன் பங்கேற்பார்.

Comments
Loading...