தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைத்திரி அரசிலிருந்து 10 எம்.பிக்கள் மகிந்தவின் கூட்டு எதிரணிக்கு தாவல்?

rajapaksaஅரசில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த பத்து எம்பிக்கள் எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதியுடன் அரசிலிருந்து விலகி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாகவும் . இவ்வாறு விலகவுள்ள பத்து பேரும் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த பத்து பேரும் காலி, புத்தளம், குருநாகல், கம்பகா, மொனராகல, இரத்தினபுரி, மாத்தளை, மற்றும் பதுளை மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பத்து ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களும் அரசிலிருந்து விலகுவதற்கான பின்னணியில் இரண்டு சக்திவாய்த அமை ச்சர்கள் செயற்படுவதாகவும் அவர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இந்த விடயம் குறித்து இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Loading...