தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் ஏற்பட்ட நிலவெடிப்பு அகலமாவதால் மக்கள் பீதி!

article_1453777935-aaஅச்சுவேலி நவக்கிரிப் பகுதியில், கடந்த 23ஆம் திகதி அதிகாலை, நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு, 1.5 சதமமீற்றர் அகலத்துக்கு விகாரமடைந்துள்ளது.

மேலும், புதிதாக சில இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வெடிப்பு ஏற்பட்ட பகுதி சற்றுக் கீழிறங்கியுள்ளது.

இந்த வெடிப்பு சுண்ணாம்புப் பாறைகளின் விரிசல்கள் காரணமாக ஏற்பட்டது என்றும், நிலநடுக்கத்தால் ஏற்படவில்லையெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஏஸ்.ரீ.வீ.ராஜேஸ்வரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் வெடிப்பானது மேலும் விகாரமடைவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவியுள்ளதாக அப்பகுதி கிராமஅலுவலர் தெரிவித்தார்.

Comments
Loading...