தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் தொடரும் பயங்கரம்! அச்சத்தில் மக்கள்

வர்த்­த­க­ருக்கு மயக்க மருந்து விசி­றி­விட்டு வர்த்­தக நிலை­யத்­தி­லி­ருந்த வியா­பா­ரப் பணம், அவர் அணிந்­தி­ருந்த தங்க மோதி­ரம் மற்­றும் அலை­பேசி ஆகி­ய­வற்றை திரு­டர்­கள் அப­க­ரித்­துச் சென்­றுள்­ள­னர்.

மயக்­க­ம­டைந்த நிலை­யில் மீட்கப்­பட்ட வர்த்­த­கர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்பாணத்தில் மிரு­சு­வில் உச­னில் நேற்­று­முன்­தி­னம்­மாலை இடம்­பெற்­றது.

வர்த்­தக நிலை­யத்­தில் பொருள்­கள் வாங்க வந்­த­வர்­கள், அங்கு வர்த்­த­கர் இல்­லா­த­தால் அரு­கில் உள்ள வீட்­டில் விசா­ரித்­துள்­ள­னர். அவர் அங்கு வர­வில்­லை­யெ­னக் கூறிய குடும்­பத்­தி­னர் கடை­யி­னுள் சென்ற பார்த்­த­போது அங்கு மயங்­கிய நிலை­யில் காணப்­பட்­ட­ார். அதையடுத்து அவர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டார்.

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சை­ய­ளித்த மருத்­து­வர்­கள் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

வர்த்­த­கர் அணிந்­தி­ருந்த மோதி­ரம் அவ­ரது அலை­பேசி மற்­றும் பொருள்­கள் கொள்­வ­னவு செய்ய வைத்­தி­ருந்த ஒரு லட்­சம் ரூபா­வுக்கு மேற்­பட்ட பணம் ஆகி­யவை காணா­மல் போயுள்­ள­தென உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது.

இதே இடத்­தைச் சேர்ந்த வே.சுப்­பி­ர­ம­ணி­யம் (வயது 68) என்­ப­வரே மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­வ­ரா­வார். கொடி­கா­மம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

Comments
Loading...