Designed by Iniyas LTD
யாழில் மனைவி மீது கணவன் கோடரி வெட்டு!
கணவரின் கோடரி வெட்டுக்கு இலக்கான மனைவி, யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே இன்று (14.03.2017) கோடரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார். யாழ். திருநெல்வேலி சந்தி பகுதியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவி மீது கணவன் கோடரியால் வெட்டியுள்ளார். கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இந்த கோடரி வெட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.