தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் தேர்தல் பிரசாரத்தில் இனப்படுகொலையாளி மஹிந்த!

சிறீலங்கா பொதுஜன முன்னனியின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்திற்காக இன்று  மஹிந்த யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.இன்று காலை முற்பகல் 11 மணியளவில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சிறீலங்கா பொதுஜன முன்னனியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் ஆரம்பமாகியிருந்தது.

இலங்கை ஜனாதிபதி பதவியை இழந்த பின்னர் மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையினில் மஹிந்த யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
உச்சகட்ட சோதனை கெடுபிடிகள் மத்தியில் விசேட அதிரடிப்படையின் அதிகளவு பிரசன்னத்தின் மத்தியில் இப்பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் பீரிஸ் உள்ளிட்ட சிறீலங்கா பொதுஜன முன்னனியின் பிரமுகர்கள் பலரும் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.
இதனிடையே ஜனாதிபதி மஹிந்த என விழித்து அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்து தரப்பினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

எனினும் யாழில் மகிந்த வருகைக்கு எதிராக எந்தவொரு போராட்டங்களும் இடம்பெறவில்லை என்பது கவலைக்குரியது..

Comments
Loading...