Designed by Iniyas LTD
வட மாகாணத்தில் குற்றச் செயல்களுக்குக் காரணம் போதைப்பொருள் பாவனையே – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
வட மாகாணத்தில் அநேகமான குற்றச் செயல்களுக்குக் காரணம் போதைப்பொருள் பாவனையே என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியும் தெரிவித்துள்ளது.
சுழிபுரம் சிறுமி றெஜினாகொல்லப்பட்டமையைக் கண்டித்தும் மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுக் கவனவீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.
இதன்போது பல்வேறு கோசங்களை எழுப்பி மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
காவல் துறையே நித்திரையா, காவல் துறையும் கயவர்களுடனா, வளரும் பயிரை முளையில் கிள்ளாதே, இலஞ்சம் வாங்குவதில் இருக்கும் ஆர்வம் குற்றங்களைத் தடுப்பதில் இல்லை” உட்படப் பல வாசங்கங்களுடன் அவர்கள் கோசங்களை எழுப்பியுள்ளனர்.
போராட்ட முடிவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, ந்சிறுமி காட்டுமிராண்டிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.என்றும் போரை முடித்த அரசுக்கு போதையை ஒழிக்கத் தெரியாதா? எமது மண்ணில் நடைபெறும் அநேகமான குற்றச் செயல்களுக்குக் காரணம் கஞ்சா போதைப் பொருள் பாவனையே என சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கில் போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றதாகவும், இதனை ஒழிக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதோடு பொலிஸார் அசமந்தப் போக்காக இருக்காமல் தங்களது கடமைகளைச் செய்ய வேண்டும். இங்கே நடக்கும் குற்றச் செயல்களுக்குப் பின்னணியாகப் பொலிஸார் இருக்கின்றார்களா என்ற சந்தேகமும் எழுகின்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கடல் வழியாக அல்லது வேறு வழியில் வரும் கேரளக் கஞ்சாவை ஏன் நிறுத்த முடியவில்லை? என்றும் இவ்வாறு போதைவஸ்துக்கள் வரப்படுவது தமிழ் மக்களை அழிக்கும் திட்டமிட்ட சதி எனவும் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.