தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வட மாகாணசபையின் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

8சட்டத்தரணிகள் சங்கத்தின் 7வது கூட்டமொன்று இன்று திங்கட் கிழமை 2014-02-03 கொழும்பில் இடம்பெற்றது. மாகாணசபை அதிகாரங்களுக்குள் மனித உரிமை விடயம் உள்ளடங்குவதில்லை என சட்டத்தரணிகள் ஒன்றிணைந்த சங்கத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி கபில கமகே தெரிவித்துள்ளார். இந்நிலையில் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments
Loading...