Designed by Iniyas LTD
20 ஆவது திருத்தச் சட்டவரைவை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை வடக்கு மாகாணசபை இன்று நிராகரித்துள்ளது. இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதென்னும், அதில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டால், அதன் பின்னர் பரிசீலிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.