தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

251 ரூபாய் ஸ்மார்ட் போன் நிறுவனம் மீது வழக்குப்பதிவு!

showImageInStoryவெறும் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வழங்­கப்­படும் என அறி­வித்­தி­ருந்த ரிங்கிங் பெல்ஸ் நிறு­வ­னத்தின் மீது வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

பா.ஜ.க. நிர்­வாகி கிரித் சோமையா அளித்த புகாரின் அடிப்­ப­டையில், நொய்­டாவின் ரிங்கிங் பெல்ஸ் நிறு­வ­னத்தின் மீதும், நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் மோஹித் கோயல், தலைவர் அசோக் சத்தா ஆகியோர் மீதும் தகவல் தொழில்­நுட்பச் சட்டம், தண்­டனைச் சட்­டத்தின் 420 எம் ஆவது பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

சோமையா அளித்த புகாரில், “251 ரூபாய்க்கு கைப்­பே­சி­களை விற்­பது முற்­றிலும் சாத்­தி­ய­மற்­றது. இது மக்­களை ஏமாற்றும் வேலை. இந்த அறி­விப்பின் மூலம் பல கோடி வாடிக்­கை­யா­ளர்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர்” எனக் கூறப்­பட்­டுள்­ளது.

வழக்கு குறித்து மோஹித் கோயல் கூறு­கையில், “காவல் துறையின் விசா­ர­ணைக்கு முழு ஒத்­து­ழைப்பு கொடுப்­ப­தோடு அவர்கள் கேட்கும் அனைத்து ஆவ­ணங்­களும் சமர்ப்­பிக்­கப்­படும்” என்றார். மேலும், முன்பே அறி­வித்­தி­ருந்­தது போல, நிச்­சயம் 251 ரூபா­விற்கு மலிவு விலை ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திக­திக்­கு விண்­ணப்­பித்­தி­ருக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

Comments
Loading...