Designed by Iniyas LTD
கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
குறித்த கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ என்பன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது