Designed by Iniyas LTD
ஐ.நா விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி சிறிலங்காப் படைத்தளபதி சந்திப்பு
ஐ.நா விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிற்கும் சிறிலங்காப் படைத்தளபதி லெப்ரினன் ஜெனரல் தயா ரத்நாயக்கவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காப் படைகளின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா விசாரணைகளை தொடங்கியுள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இன்று சிறிலங்காப் படைத்தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதில் மேஐர் ஜெனரல் அமல் கருணாசேகர மற்றும் பிரிகேடியர் ராவ் நுகேர ஆகியோரும் கலந்துகொண்டுள்ளன